சி.வி.சண்முகத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

முதலமைச்சர் ஸ்டாலினை பற்றி அவதூறாக பேசியதாக அதிமுக எம்.பி, சி.வி.சண்முகம் மீது மேலும் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வானூர் கோட்டகுப்பத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பற்றி சி.வி.சண்முகம் அவதூறாகப் பேசியதாக, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் டி.எஸ்.சுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, வழக்கின் விசாரணை நவம்பர் 17-ஆம் தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் சி.வி.சண்முகம் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். ஏற்கெனவே, முதலமைச்சரை அவதூறாகப் பேசியதாக சி.வி.சண்முகம் மீது 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்