மு.க.அழகிரி மீதான வழக்கு... இன்று வெளியாகிறது தீர்ப்பு | MK Alagiri

x

2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்துவை தாக்கியதாக, மு.க.அழகிரி, மதுரை துணை மேயராக இருந்த மன்னன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் என 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், மதுரை மாவட்ட ஜே.எம். 1 நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்