"பிரதமர் மோடி இருக்கும்போது ஊழல் நடக்காது" - ஆளுநர் தமிழிசை

x

பிரதமர் மோடி இருக்கும்போது ஊழல் நடக்காது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய இடத்துக்கு சிவசக்தி என்று பெயரிட்டதை இறைவன் இல்லை என்று கூறுபவர்களும், பிரதமர் எது கூறினாலும் தவறு சொல்பவர்களும்தான் விமர்சிக்கிறார்கள் என்றும் கூறினார். மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், அதற்காக அவர்களை பாராட்டுகிறேன் என்றும் கூறியுள்ளார். பிரதமர் மோடி இருக்கும்போது ஊழல் நடக்காது என்றும், சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருப்பது குறித்து தெளிவான விளக்கம் தரப்படும் என்றும் கூறினார்.

-


Next Story

மேலும் செய்திகள்