அமைச்சர் பிடிஆர் தலைமையில் ஆலோசனை | Minister PTR

x

சென்னை அண்ணா சாலையில் உள்ள செங்கல்வராயன் நாயக்கர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர், அரசு கேபிள் டிவி ஆபரேட்டர் சங்கம், தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையினர் கலந்து கொண்டனர். அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தலைமையில் இந்த கூட்டத்தில் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மேலாண் இயக்குநர் ஜான் லூயிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கேபிள் டிவி சேவையை தடையின்றி வழங்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்