திருநாவுக்கரசர் பரபரப்பு அறிக்கை.. வெட்ட வெளிச்சமான புகைச்சல்

x

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் அறிக்கை வெளியிட்டுள்ளார்...

17-வது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தன்னை 4 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், இந்தியாவில் காங்கிரஸ் வேட்பாளர்களிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி என தெரிவித்த அவர், தான் பதவியிலிருந்த போது செய்து முடித்த பணிகளைப் பட்டியலிட்டுள்ளார்... தனக்கு நாடாளுமன்ற உறுப்பினராக தற்போது பணியாற்ற வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் தொகுதி மக்களுக்காக தனது பணி எப்போதும் தொடரும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இத்தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், தன் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினராக தான் தொடரக் கூடாதென இத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்... மேலும் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற வாசகத்தையும் திருநாவுக்கரசர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்...

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுகவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அக்கட்சியின் சார்பில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ போட்டியிடும் நிலையில் அவர் வெற்றி பெற வாழ்த்துகள் எதுவும் தெரிவிக்காமல் அறிக்கை வெளியிட்டுள்ளது பேசு பொருளாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்