"ஜன-26,27..." ராகுல் காந்தி முக்கிய அறிவிப்பு

x

பாரத் ஜோடோ நியாய யாத்திரை அசாம் மாநிலத்தில் இருந்து மேற்குவங்க மாநிலத்திற்கு நுழைந்தது. அப்போது, அசாம் காங்கிரஸ் தலைவர் பூபென் குமார் போரா, மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியிடம் மூவர்ணக் கொடியை ஒப்படைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, மேற்குவங்கம் வந்ததில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் வெறுப்பு, வன்முறை, அநீதியை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார். அதனால்தான் அநீதிக்கு எதிராக இந்தியா கூட்டணி இணைந்து போராடப்போவதாக குறிப்பிட்டார். மேற்குவங்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் யாத்திரைப் பயணம் தொடர்வதாகவும், 26 மற்றும் 27-ம் தேதிகளில் யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டு, மீண்டும் தொடரும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்