இணைகிறார் பிரியங்கா... காத்திருக்கும் காங்., கண்கள் | Congress | Priyanka Gandhi

x

உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் பாரத் ஜோடா நீதி யாத்திரையில், காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நாளை இணையவுள்ளார். ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்த யாத்திரையில், கடந்த 16-ஆம் தேதியே பிரியங்கா காந்தி இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால், யாத்திரையில் பங்கேற்க முடியாத சூழல் உருவானது. இந்நிலையில், பிரியங்கா காந்தி சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியதால், அவர் யாத்திரையில் கலந்து கொள்ளவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்