காங்கிரஸ் தலைமையில் இருந்து வந்த கடிதம் - உடனே ஓகே சொன்ன வைகோ..!

x

ராகுல் காந்தியின் நடைபயண நிறைவு விழாவில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்கவுள்ளார். ராகுல் காந்தி மேற்கொண்டு வந்த நடைபயணம் வரும் மார்ச் 17-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நிறைவு பெறுகிறது. இந்நிகழ்வில் பங்கேற்க இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்நிகழ்வில் பங்கேற்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஏற்று இந்நிகழ்வில் வைகோ பங்கேற்கவுள்ளதாக, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்