பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும், ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும், இந்த திட்டம் தொடங்கப்படுவதாக, 110 விதியின் கீழ், சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி, குறிப்பிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு முதற்கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், மதுரையில் இன்று திட்டத்தை துவக்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், மாணவர்களுடன் சிற்றுண்டி அருந்த உள்ளார்.