ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணித்த அமைச்சர்

x

சென்னை வேப்பேரியில் நடைபெற்ற கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் 23-ஆவது பட்டமளிப்பு விழாவில், ஆயிரத்து 166 பேருக்கு ஆளுநர் ரவி பட்டங்களை வழங்கி கௌரவித்தார். இந்த விழாவில் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விழாவை அமைச்சர் புறக்கணித்தார். அண்மையில், கால்நடை அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலத்தை அரசின் பரிசீலனை இல்லாமல் ஓராண்டுக்கு நீட்டித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்ததால், விழாவை அமைச்சர் புறக்கணித்திருப்பதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்