"சென்னை தினம்"...முதல்வர் சொன்ன அந்த ஒரு வார்த்தை | CM Stalin | Tamilnadu | Chennai Day

x

ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி சென்னை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை தினத்தையொட்டி, டுவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு, தமிழ்நாடெனப் பெயர் சூட்டினார் என்றும், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை எனப் பெயர் மாற்றினார் என்றும் குறிப்பிட்டு உள்ளார். சென்னையை கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா? ஊர் என்பதா?உயிர் என்பதா? என நெகிழ்ச்சியுடன் கேள்வி எழுப்பியுள்ள முதலமைச்சர், சென்னை என்பது, பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமம் எனத் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்