"அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கு" - உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

x

அமைச்சர் கே.என்.நேரு மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் நேரு தரப்பில், இந்த வழக்கில் சமரசமாக சென்று விட்டதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. புகார்தாரர் தரப்பிலும் சமரச மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்