"ஒரு அமைச்சரே இப்படி பேசலாமா?" - கொதித்து பேசிய அண்ணாமலை

x

தனி நாடு விவகாரம் குறித்த அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். விருதுநகரில் பாதயாத்திரையை முடித்துக்கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்து குறித்து நாடாளுமன்றத்தில் ஸ்மிரிதி இரானி பேசியதை குறிப்பிட்டார். மேலும், பாதயாத்திரையின்போது, 5 ஆயிரத்து 500 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், பாதயாத்திரை முடிந்த பின்னர், மனுக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெயிடப்படும் என்றும் அண்ணாமலை கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்