"அண்ணாமலைக்கு புத்தகங்கள் அனுப்பியாச்சு.." - அமைச்சர் சேகர் பாபு சொன்ன தகவல்

x

கோயில் நிலங்கள் மீட்கப்பட்டது குறித்த புத்தகங்கள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 100 தட்டச்சர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு, பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்த ஆட்சியில் தான், ஆயிரத்து 77 திருக்கோயிலுக்கு குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்