திடீரென விலகும் முக்கிய புள்ளி?.. பாஜகவிற்கு மேலும் ஒரு அடியா?

x

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக எம்.பி. வருண் காந்தி தனித்துப் போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வருண் காந்தியின் தொகுதியான, உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில், வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பல்வேறு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ள நிலையில், பிலிபிட் தொகுதிக்கு இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. வேளாண் சட்டங்கள், விவசாயிகள் போராட்டம் போன்ற விவகாரங்களில் மத்திய அரசை வருண் காந்தி தொடர்ந்து விமர்சித்து வந்ததால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என பாஜகவின் உள்ளூர் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். பாஜக மேலிடமும் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப் போவதில்லை என்று முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பிலிபிட் தொகுதியில் வருண் காந்திக்கு பாஜக மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை என்றால், சுயேட்சையாகவோ அல்லது சமாஜ்வாதி கட்சியின் சார்பிலோ போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்