பாஜகவின் 44வது ஆண்டு நிறுவன தினம்.. "3வது முறை ஆட்சியை பிடித்தால் தான்.." - மோடியின் மெகா திட்டம்

x

பாஜகவின் 44வது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 21ம் நூற்றாண்டில் இந்தியாவிற்குத் தலைமைத்துவத்தை வழங்கவும் தங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கட்சியாக பாஜகவை இந்திய இளைஞர்கள் பார்ப்பதாகப் பெருமிதம் தெரிவித்துள்ளார். பாஜகவின் திட்டங்களும் கொள்கைகளும் ஏழைகள் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வலிமை அளித்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர் மோடி மத்தியிலிருந்தாலும் மாநிலத்திலிருந்தாலும் நல்ல நிர்வாகம் என்பதை பாஜக மறு வரையறை செய்திருப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார். தேசத்தை நீண்ட காலம் ஆட்சி செய்தவர்களின் அடையாளமாக இருந்த ஊழல் கலாச்சாரத்தில் இருந்தும், பெரு முதலாளித்துவம் சாதிவெறி, வகுப்புவாதம், வாக்கு வங்கி அரசியலிலிருந்தும் இந்தியாவை தங்கள் கட்சி விடுவித்துள்ளது எனத் தெரிவித்துள்ள பிரதமர் இன்றைய இந்தியாவில், வளர்ச்சியின் பலன்கள் எந்தவித பாகுபாடுமின்றி ஏழைகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யும் தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை வழங்கி மக்கள் ஆசிர்வதிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக அமைக்கப்பட்ட மைதானத்தைக் கட்டி எழுப்ப முடியும் எனவும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்