``சரியான வேட்பாளர்கள் இல்லை.. திணறும் பாஜக'' - போட்டு தாக்கிய தங்கம் தென்னரசு

x
  • தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது..
  • அந்த வகையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஐ.பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
  • பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்று தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரசாமியை கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர்.
  • நாகர்கோவிலில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், பா.ஜ.க.விடம் சரியான வேட்பாளர்கள் இல்லாததால் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், ஆளுநர்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளதாக விமர்சித்தார்.
  • அதேபோல விருதுநகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சிகள் கூட்டணியை முடிவு செய்ய முடியாமல் திணறி வரும் வேளையில், பிரச்சாரத்தை தொடங்கிய ஒரே இயக்கம் தி.மு.க.தான் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்