அதிமுக EX அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை... அன்று அதிர்ச்சி கொடுத்த உத்தரவு...ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு

x

அதிமுக EX அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை... அன்று அதிர்ச்சி கொடுத்த உத்தரவு...ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு

பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

கடந்த 1998-ஆம் ஆண்டு, ஓசூரை அடுத்த பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில், மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை எம்.பி, - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதில், பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் 2019-ஆம் ஆண்டு தீர்ப்பளித்ததால், அவர் அமைச்சர் பதவியை இழந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரன் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்