பணிக்காலத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனம்..!

x

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், கருணை அடிப்படையில் 441 பேருக்கு, அமைச்சர் நேரு பணி நியமன ஆணைகளை வழங்கினார். சென்னை மாநகராட்சியில் பணி காலத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகள் 451 பேருக்கு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, முதல்வர் ஸ்டாலின் 10 பேருக்கு அடையாளமாக பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்தநிலையில் மீதமுள்ள 441 பேருக்கு, அமைச்சர் நேரு இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்