"காங். செய்யாததை பாஜக செய்தது..." - அண்ணாமலை பரபரப்பு பேச்சு | Annamalai

x

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் மூன்றாம் கட்ட என் மண், என் மக்கள் யாத்திரை திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் தொடங்கியது. இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எல். முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த யாத்திரை சிந்தாமணி திரையரங்க பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து, பிரத்தியேக வாகனத்தில் மத்திய அமைச்சர்கள் உரையாற்றுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்