செக் வைத்த தேர்தல் அதிகாரி.. அதிர்ச்சியில் வடசென்னை பாஜக வேட்பாளர்

தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டதாக பாஜக வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ் உட்பட 80 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது... பாஜக மாநில துணைத் தலைவர் பால் கனகராஜ் நேற்று தண்டையார் பேட்டையில் உள்ள வடசென்னை நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளை சந்தித்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி எந்தவித அனுமதியும் பெறாமல் கூட்டம் நடத்தியதாக தேர்தல் அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் பால் கனகராஜ் உட்பட 80 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com