"அறிஞர் அண்ணாவின் நினைவு நாளன்று..." - அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு

x

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவுநாளை முன்னிட்டு, தங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என, சென்னை மாவட்ட திமுக அறிவித்துள்ளது. வரும் 3 ஆம் தேதி காலை நடைபெறவுள்ள இந்த பேரணி, வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலையில் தொடங்கி, அண்ணா சதுக்கத்தை சென்றடையவுள்ளது. பேரணியின் முடிவாக காலை 7 மணியளவில், துரைமுருகன், திமுக பொருளாளர் டி. ஆர். பாலு உள்ளிட்டோர், அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்