"இது நடந்தால் தருமபுரி மக்கள் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்ல மாட்டார்கள்" - அன்புமணி மகள் உறுதி

x

தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணியை ஆதரித்து, அவர்களின் மகள் சங்கமித்ரா, பென்னாகரம் பகுதியில் வாக்கு சேகரித்தார். பாப்பாரப்பட்டியில் உள்ள வாரச்சந்தையில், வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர், காவிரி உபரிநீர்த் திட்டம், ஒகேனக்கல் குடிநீர் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த பாமக பாடுபடும் என்று கூறினார். இந்த திட்டங்கள் நிறைவேறினால், தருமபுரி மாவட்ட மக்கள் வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்ல மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்