நிர்மலா சீதாராமனை சந்தித்து அதிமுகவினர் வைத்த முக்கிய கோரிக்கை

x

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் அதிமுக எம்பி தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். அதில், தென்னை தொடர்பான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக் கூடாது என்றும், தேங்காய் எண்ணெயை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். தென்னை நார் மற்றும் கயிறு தயாரிப்பு நிறுவனங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்