"சீன-இலங்கை நெருக்கத்தை மத்திய அரசு கவனிக்கிறது" - வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன்
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுக்கும் என வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுக்கும் என வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், இலங்கை விவகாரத்தில் சீனாவின் நெருக்கம் குறித்து மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளதா என கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன், இலங்கையின் ஒருசில துறைமுகங்கள் தொடர்பான திட்டங்களில் சீன நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
Next Story