வரும் 7ஆம் தேதி அதிமுக தேர்தல் - ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் வேட்பு மனு தாக்கல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வரும் 7ஆம் தேதி அதிமுக தேர்தல் - ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் வேட்பு மனு தாக்கல்
x
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 16 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நாளையும், நாளை மறுநாள் வேட்பு மனுகள் திரும்ப பெற கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 6ஆம் தேதிக்குள் வேட்புமனுக்கள் வாபஸ் பெறாவிட்டால் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் இணை தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்