சசிகலாவை வரவேற்று சுவரொட்டி - அதிமுக பிரமுகர்கள் பகிரங்க விளம்பரம்

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா மீண்டும் பதவியேற்க வேண்டும் என கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், சாத்தூர் பகுதிகளில் வாசகம் பொறித்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
x
சிறையில் இருந்து வந்த சசிகலா மற்றும் அதிமுக இடையே, பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. முன்னாள், இந்நாள் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்களுடன் விரைவில் கட்சியை வழிநடத்த வருவேன் என சசிகலா பேசிவரும் நிலையில், அவரை வரவேற்று கிருஷ்ணகிரி பகுதியில் சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளது. பர்கூர் அதிமுக பிரமுகர் தேவராசன், காவேரிப்பட்டணம் வெற்றிவேல் ஆகியோர் பல்வேறு கருத்துக்களுடன் சுவரொட்டி ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்