முதலமைச்சராக பதவியேற்றார் மம்தா... பதவியேற்பு விழாவை புறக்கணித்த பா.ஜ.க.

கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுவதே தனது தலையாய கடமை என 3வது முறையாக மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றுக் கொண்ட மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
x
முதலமைச்சராக பதவியேற்றார் மம்தா... பதவியேற்பு விழாவை புறக்கணித்த பா.ஜ.க.

கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுவதே தனது தலையாய  கடமை என 3வது முறையாக மேற்கு வங்க முதல்வராக  பதவியேற்றுக் கொண்ட மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றின் காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையாக நடைபெற்ற விழாவில் மமதா பானர்ஜி  மட்டுமே முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.ஆளுநர் ஜெகதீப் தன்கர்,  மம்தா பானர்ஜிக்கு பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மிக எளிமையாக நடைபெற்ற  இந்த விழாவில், பிரசாந்த் கிஷோர், மமதா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அப்துல்மனான் உள்ளிட்ட 67 நபர்கள் மட்டுமே பங்கேற்றனர். அம்மாநில பா.ஜ.க. ,தேர்தலுக்கு பிந்தைய வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியேற்பு விழாவைப் புறக்கணித்தது 








Next Story

மேலும் செய்திகள்