கொரோனா தடுப்பூசி போடும் பணி...மத்திய அரசு தோல்வி - ப.சிதம்பரம்
நாட்டில் தடுப்பூசி போடும் பணியில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.
நாட்டில் தடுப்பூசி போடும் பணியில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார். ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் விகிதம் அதிகரித்து வருவதாகவும், இது குறித்து யாரேனும் சிந்திக்கிறார்களா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 5.9 கோடி கொரோனா தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ள சிதம்பரம்,ஆனால் இந்தியர்களுக்கு இதுவரை 3 கோடி அளவுக்கே, கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டு உள்ளது என்பதில் ஏமாற்றமடைவதாக தெரிவித்துள்ளார்.
Next Story