நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல்.. பாஜக சார்பில் நெல்லையில் போட்டியிட மனு

வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் முன்னரே, திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட, பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்
நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல்.. பாஜக சார்பில் நெல்லையில் போட்டியிட மனு
x
வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் முன்னரே, திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட, பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். கட்சியினர் எவரும் இன்றி மகனுடன் வந்த அவர், தொகுதியின் தேர்தல் அலுவலரும், உதவி ஆட்சியருமான சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திருநெல்வேலி தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்சி இன்னும் அதிகாரபூர்வமாக வேட்பாளரை அறிவிக்காத நிலையில், நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். நல்ல நேரம் என்பதால்,இன்று மனு தாக்கல் செய்ததாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்