மக்கள் நீதி மய்யம்- 4ஆம் ஆண்டு துவக்க விழா - பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக நடத்த திட்டம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா ஏற்பாடுகளில் அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாகி உள்ளனர்.
மக்கள் நீதி மய்யம்- 4ஆம் ஆண்டு துவக்க விழா - பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக நடத்த திட்டம்
x
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா ஏற்பாடுகளில் அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாகி உள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி, நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார்.  கட்சி தொடங்கி ஒரு வருடத்திலேயே நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மூன்றாமிடம்  பிடித்தது. தற்போது, 2021 சட்டமன்ற தேர்தலுக்கான, முதல் சுற்று பிரசாரத்தை முடித்துள்ள கமல்ஹாசன், தேர்தல் பணி, அடுத்தக்கட்ட தேர்தல் பிரசாரம், கூட்டணி உள்ளிட்ட வேலைகளில் தீவிரமாகியுள்ளார். இதனிடையே, கட்சியின் 4 ஆம் ஆண்டு துவக்க விழா பிப்ரவரி 21ஆம் தேதியன்று வருகிறது. அதை, மதுரை அல்லது திருச்சியில், பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக நடத்த திட்டமிட்டுள்ள மக்கள் நீதி மய்யம், கூட்டத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்