குஜராத் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு காணொலி வாயிலாக பிரதமர் அடிக்கல் நாட்டினார்

மருந்து கிடைத்தாலும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு காணொலி வாயிலாக பிரதமர் அடிக்கல் நாட்டினார்
x
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்... 201 ஏக்கரில், ஆயிரத்து195 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளது.  இந்த மருத்துவமனையின் பணிகள் 2022-ஆம் ஆண்டு மத்தியில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடிக்கல் நாட்டிய பின் பேசிய பிரதமர் மோடி, இந்த உலகுக்கே ஒட்டுமொத்த சுகாதார மையமாக இந்தியா விளங்குவதாக தெரிவித்தார். மேலும், மருந்து கிடைத்தாலும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், மருந்தும் இருக்க வேண்டும், எச்சரிக்கையும் இருக்க வேண்டும் என்பதே 2021ல் நமக்கான மந்திரம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்..  


Next Story

மேலும் செய்திகள்