நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவி - மாணவியை தத்தெடுத்த எம்.எல்.ஏ.ரோஜா

நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த தாய், தந்தையற்ற மாணவியை, நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜா தத்தெடுத்து, நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவி - மாணவியை தத்தெடுத்த எம்.எல்.ஏ.ரோஜா
x
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்த நாளையொட்டி, நகரி தொகுதி எம்.எல்.ஏ ரோஜா, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன் ஒரு பகுதியாக, திருப்பதியில் உள்ள காப்பகத்தில் படித்து வந்த மாணவியை அவர் தத்தெடுத்து உள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற புஷ்பகுமாரி என்ற மாணவிக்கு தாய்-தந்தை இல்லாத நிலையில், அவரை தத்தெடுப்பதாக ரோஜா அறிவித்து உள்ளார். அந்த மாணவியின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்க உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். ரோஜாவின் இத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்