காங்கிரஸுக்கு சோனியா காந்தியே தலைவராக நீடிக்க வேண்டும் - பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்

அகில இந்திய காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக அக்கட்சிக்குள் கருத்து மோதல்கள் எழுந்துள்ளது.
காங்கிரஸுக்கு சோனியா காந்தியே தலைவராக நீடிக்க வேண்டும் - பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்
x
அகில இந்திய காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக அக்கட்சிக்குள் கருத்து மோதல்கள் எழுந்துள்ளது. பெரும்பாலானோர் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், ஒருசாரார் சோனியா காந்தி குடும்பம் தவிர்த்து கட்சியில் வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸை சேர்ந்த பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் கூறும்போது, சோனியா காந்தி விரும்பும் வரை காங்கிரஸ் தலைவராக அவரே நீடிக்க வேண்டும் என்றும், அதன்பிறகு ராகுல் காந்தி வர வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்