"ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்க போவதில்லை": கொரோனா எதிரொலி - அமித்ஷா அறிவிப்பு

கொரோனா பாதிப்பு எதிரொலியாக, ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்க போவதில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்க போவதில்லை: கொரோனா எதிரொலி - அமித்ஷா அறிவிப்பு
x
முன்னதாக பிரதமர் மோடி, ஹோலி கொண்டாட்டங்களை ரத்து செய்த நிலையில், அமித்ஷா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஹோலி இந்தியர்களுக்கான முக்கியமான பண்டிகை என்றாலும், கொரோனா பாதிப்பு காரணமாக இந்த வருடம் கொண்டாட்டங்களில் பங்கேற்க போவதில்லை என்று குறிப்பிட்டார். பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், குடும்ப நலத்தை கவனித்து கொள்ள வேண்டும் என்றும் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்