"விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு : இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம்"
சிவகங்கை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் முன்னிலையிலேயே விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
சிவகங்கை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் முன்னிலையிலேயே விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருப்புவணம் ஊராட்சிக்குட்பட்ட தெப்பகுளத்தில் மைய மண்டபம் அமைக்கும் பணி நடைபெற்றது வருகிறது. அங்கு மதம் சார்ந்த சிலைகள் அமைக்க கூடாது என்று மதிமுகவை சேர்ந்த சேகர் என்பவர் கூறிய கருத்து தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையில், அவர்களை காவல் துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
Next Story