"என்.ஆர்.சி. - என்.பி.ஆர். தொடர்பில்லை" - உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்

தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என, உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
என்.ஆர்.சி. - என்.பி.ஆர். தொடர்பில்லை - உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்
x
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, என்ஆர்சி தொடர்பாக விவாதிக்க எந்த வித தேவையும் இல்லை என, பிரதமர்  சரியாக கூறியதாக குறிப்பிட்டார். என்.பி.ஆர்க்கு எதிரான முடிவை கேரளா மற்றும் மேற்குவங்க முதலமைச்சர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அரசியலுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களை தடுக்க வேண்டாம்  என்றும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். 



Next Story

மேலும் செய்திகள்