"சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் நாட்டிய விழா : அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்தார்"
"சட்டம் - ஒழுங்கில் சிறந்து விளங்கும் தமிழகம்"
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நாட்டிய விழா நடைபெற்று வருகிறது. இதனை தொடக்கிவைத்து பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சட்டம் - ஓழுங்கை காப்பதில், தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்வதாக தெரிவித்தார். மதுரை கோவிந்தராஜ் குழுவினரின் மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம் உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகளும், ஊர்மிளா சத்தியநாராயணன் குழுவினரின் பரதநாட்டியமும் நடந்தது. வெளிநாட்டு பயணிகள் திரளானோர் கலந்து கொண்டு கலைநிகழச்சிகளை பார்த்து ரசித்ததுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்
Next Story