"திருவள்ளுவரை எதற்குள்ளும் அடைக்க முடியாது" - நாஞ்சில் சம்பத்

"திருவள்ளுவர் சிலை அவமரியாதை - கண்டனத்துக்கு உரியது"
x
திருவள்ளுவர் சிலை அவமரியாதை மிகுந்த கண்டனத்துக்கு உரியது என மூத்த அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து "தந்தி டிவி".க்கு அளித்த பேட்டியில், வான்புகழ் கொண்ட வள்ளுவரை, சிலர் சொந்தமாக்க நினைக்கிறார்கள் என குற்றம்சாட்டினார். தமது சுயவிவரம் குறித்து எந்தப் பதிவையும் செய்யாமல், மனிதனின் வாழ்வு குறித்து சிந்தித்தவர்களில் வள்ளுவரை போன்றவர், யாரும் இல்லை என்ற நாஞ்சில் சம்பத், வள்ளுவர் சிலை மீதான அவமரியாதையை செய்தவர்கள் இழிவானவர்கள் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்