"திமுக அறிவித்த போராட்டத்திற்கு அமித்ஷா பயந்துவிட்டார்" - உதயநிதி ஸ்டாலின்
"தலைமை அனுமதி அளித்தால் போராட்டம் நடத்துவோம்"
திமுகவின் போராட்ட அறிவிப்பிற்கு பயந்துதான் அமித்ஷா இந்தி பொது மொழி குறித்த தனது கருத்தை மாற்றிக் கொண்டார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார் .திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் திமுக இளைஞரணி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது .இவ்விழாவில் திமுகவின் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார் . பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்தி திணிப்பு எப்போது நடந்தாலும் திமுக கடுமையாக எதிர்த்து போராடும் என்று தெரிவித்தார். திமுக தலைமை அனுமதி கொடுத்தால், திமுக இளைஞரணி சார்பாக நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
Next Story