போலி ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பு : திமுக மாநில நிர்வாகி கைது

மதுரையில் போலியாக அரசு ஆவணங்களை தயாரித்து நிலம் அபகரித்த திமுக மாநில நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
போலி ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பு : திமுக மாநில நிர்வாகி கைது
x
மதுரையில் போலியாக அரசு ஆவணங்களை தயாரித்து நிலம் அபகரித்த திமுக மாநில நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். மதுரை பை-பாஸ் SRV சுரேந்திரன் நகர் பகுதியில்  பாக்கியலட்சுமி என்பவருக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை  20க்கும் மேற்பட்டவர்களின் போலியான ஆதார் , வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்தும், போலியான ஆவணங்களை சமர்பித்தும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் திமுக மாணவரணி மாநில துணை செயலாளர் அதலை செந்தில் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்