"தற்போது பாஜகவில் மோசமான சூழல்" - யஷ்வந்த் சின்கா விமர்சனம்

"தேச துரோகி பட்டம் கிடைத்திருக்கும்"
தற்போது பாஜகவில் மோசமான சூழல் - யஷ்வந்த் சின்கா விமர்சனம்
x
மத்தியில் ஆட்சி செய்பவர்களுக்கு இந்தியாவை பற்றியும் இந்திய மக்களை பற்றியும் தெரியவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா விமர்சித்துள்ளார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் பேசிய அவர்,  அண்ணா தற்போது உயிருடன் இருந்து அப்போது முழங்கியதை இப்போது பேசினால் அவரை தேசத்துரோகி, பாகிஸ்தான் ஆதரவாளர் என்று கூறியிருப்பார்கள் என்றார். தற்போது பாஜகவில் மோசமான சூழல் நிலவுகிறது என்றும் யஷ்வந்த் சின்கா குறிப்பிட்டார். வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியா. பல மதம், மொழி இருப்பது தான் இந்தியா என்பதை அறியாததால் தான் ஒரே மொழி ஒரே நாடு என சொல்கிறார்கள் என்றும் யஷ்வந்த் சின்கா விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்