"ஆட்சியை பிடிக்க நடிகர்களுக்கு ஆசை" - அமைச்சர் செல்லூர் ராஜு

"முதலமைச்சராக நடிகர்கள் நினைக்கிறார்கள்"
x
நான்கு படம் ஓடிவிட்டால் முதலமைச்சர் ஆகிவிடலாம் என இன்றைய நடிகர்கள் நினைக்கிறார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மதுரை பெத்தானியாபுரத்தில் அண்ணாவின் பிறந்த நாள் விழா பொது கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர், புற்றீசல் போல நடிகர்கள் கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்க ஆசைப்படுகிறார்கள் என்றார். உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி பேசும் மக்களை கவரும் வகையில் தான் இந்தியை ஆதரித்து பேசியதாக செல்லூர் ராஜு குறிப்பிட்டார். டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைகளில் இந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்