வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 10 அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு
வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தனி அமைச்சர்கள் குழுவை பிரதமர் மோடி அமைத்துள்ளார்.
நிதி, பாதுகாப்பு போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக தனி அமைச்சரவை குழுக்கள் அமைப்பது வழக்கம். அதுபோலவே, வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இரண்டு புதிய அமைச்சரவை குழுக்களை பிரதமர் மோடி அமைத்துள்ளார்.10 மத்யி அமைச்சர்களை கொண்ட இந்த குழுவில், பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அதன்படி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவது, வேலை வாய்ப்பை உறுதி செய்வது போன்ற பணிகளுக்காக ஒரு அமைச்சரவை குழுவும்வளர்ச்சி திட்டங்களை வகுத்து, செயல்படுத்துவதற்காக ஒரு அமைச்சரவை குழுவும் அமைக்கப்படுகிறது
Next Story