ஆந்திராவில் புதிய முதலமைச்சராக பதவியேற்பு விழாவிற்கு வருமாறு மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு

ஆந்திராவில் புதிய முதலமைச்சராக பதவியேற்கும் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆந்திராவில் புதிய முதலமைச்சராக பதவியேற்பு விழாவிற்கு வருமாறு மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு
x
நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து, ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்க உள்ளார்.  இதற்கான விழா விஜயவாடாவில் வரும் 30-தேதி  நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று டெல்லி சென்ற ஜெகன் மோகன் ரெட்டி,  பிரதமர் மோடியை சந்தித்தார். 30-ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்