அ.ம.மு.க - வுக்கு பரிசு பெட்டகம் : கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் உத்தரவு - ராஜா செந்தூர் பாண்டியன்

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கியுள்ளது.
x
தமிழகத்தில் கடந்த 18 ந்தேதி நடைபெற்ற மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் பரிசு பெட்டகம் சின்னத்தில் போட்டியிட்டனர். இந்நிலையில் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் மே 19 ந்தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு மீண்டும் பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்க வேண்டும் என தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இதனை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாக அமமுக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்  தெரிவிதுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்