தமிழர் மனங்களை பாஜகவினரால் வெல்ல முடியவில்லை - ராகுல்காந்தி

நாக்பூரில் இருந்து தமிழர்களை ஆள, பாஜக நினைப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அவர்களுக்கு தமிழர்களின் மனம் தெரியவில்லை என்றார்.
தமிழர் மனங்களை பாஜகவினரால் வெல்ல முடியவில்லை - ராகுல்காந்தி
x
தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்ற பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டம், தேனியில் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ப. சிதம்பரம், முகுல் வாஸ்னிக், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டணி கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, தமிழர்களின் மனங்களை வெல்ல முடியாதவர்கள், பாஜகவினர் என்றார். தமிழர்களின் முற்போக்கு சிந்தனையை அறியாத ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர், தமிழர்களின், கலாசாரம், பண்பாடு, மொழி குறித்தெல்லாம் தெரிந்துகொள்ள விருப்பம் இல்லாதவர்கள் என்றார். நீட் தேர்வை திணிக்க மாட்டோம் என்ற ராகுல்காந்தி, தங்கள் தேர்தல் அறிக்கையின் நோக்கம் சமூக நீதி, நியாயம் மட்டுமே என்றார். தமிழர்களின் மனமும், எண்ணமும் பாஜகவினருக்கு தெரியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்