"யார் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்கள்" என்று மக்கள் எடை போட்டு வரும் நேரமிது - முதலமைச்சர் பழனிசாமி
"யார் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்கள்" என்று மக்கள் எடை போட்டு வரும் நேரமிது என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
"யார் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்கள்" என்று மக்கள் எடை போட்டு வரும் நேரமிது என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சிவகங்கை பா.ஜ.க. வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில், முதலமைச்சர் பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் , நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்றும், மோடியை போல் திறமையான பிரதமர் மீண்டும் வர வேண்டும் என்றும் கூறினார். மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் , தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று, விமர்சித்தார். காற்றில் கூட ஊழல் செய்த கட்சி தி.மு.க. என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
Next Story