சுங்கசாவடி ஊழியரை காலணியால் தாக்க முயற்சி : சுங்க சாவடியில் பரபரப்பு - வேல்முருகன் போராட்டம்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சென்ற காரை சுங்கச்சாவடி ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதால் தகராறு ஏற்பட்டது.
x
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது காரில் சென்றுள்ளார். இந்தியா முழுவதும் சுங்கசாவடிகளில் இலவசமாக செல்வதற்கான உரிமத்தை வேல்முருகன், சுங்க சாவடி ஊழியர்களிடம் காண்பித்தும், அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாத‌த்தில், வேல்முருகனின் கார் ஓட்டுனர், சுங்கச்சாவடி ஊழியரை தாக்கினார். இருவருக்கும் இடையே கைகலப்பு உருவானதை தொடர்ந்து, ஆத்திரமடைந்த வேல்முருகன், காரில் இருந்து இறங்கி வந்து தனது காலணியால் ஊழியரை தாக்க முற்பட்டார். 

Next Story

மேலும் செய்திகள்