"தமிழக காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தயார்" - கே.எஸ்.அழகிரி

"2 அல்லது 3 தினங்களில் வெளியிடப்படும்"
தமிழக காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தயார் - கே.எஸ்.அழகிரி
x
தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை 2 அல்லது 3 தினங்களில் வெளியிடப்படும் என  கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்றம் விடுவித்தால் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று கருத்து கிடையாது என்றார். ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன்சிங் உள்பட தலைவர்கள் பிரச்சாரத்திற்கு தமிழகத்திற்கு வர இருப்பதாக கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டார். இந்த திட்டத்தை செய்திருப்பதாக சொல்லி, வாக்கு சேகரிப்பது பா.ஜ.க., அதிமுகவால் இயலாத காரியம் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்